About Me

My photo
சொல்லிக் கொள்கிற அளவிற்கு எதுவும் இல்லை ... மற்றவர்கள் சொல்ல வேண்டிய அளவிற்கு ஏதாவது செய்யணும் .... ( ஹ்ம்ம் ... என்னத்த செஞ்சு ..._)

Saturday, January 8, 2011

உறைந்து கிடக்கிறதா காமம் ?







இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தோழர் ராஜ்மோகன் இந்த விஷயத்தை பற்றிச் சொன்னபோது நான் நம்பவில்லை ... இப்போது அதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை ...ஆனால் தொடர்ச்சியாக நான் பார்த்த இந்த இரண்டு நிகழ்வுகளும் அது குறித்த விவாதத்தை என்னுள் ஏற்படுத்திவிட்டது ...


காமம் குறித்து பேசுவதும் ,எழுதுவதும் ,வாசகனை எப்போதும், ஈர்க்கும் என்று ,தெரிந்தே எழுதும் , எத்தனையோ எழுத்தாளர்கள் , இது குறித்தும் நிறைய எழுதி இருப்பார்கள் எனக்கு வேறு நிறைய வேலைகள் இருந்ததால் அதை நான் படிக்க மறந்திருக்கலாம் ..
நான் படிக்க மறந்ததை அன்று பார்க்க நேரிட்டது ...

நிகழ்வு ஒன்று :

கடந்த ஆண்டில் ,மழைக்காலம் ஒன்றின், மழை பெய்யாத நாளில் , இரவு எப்படியும் பன்னிரண்டு மணிக்கு மேல் இருக்கும் .. நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு , நிகழ்ச்சி அமைப்பாளரை திட்டிக்கொண்டே நான் வடபழனி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன் ..

எந்த பேருந்துகளும் வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் , ஆட்டோவில் போகலாம் என்று முடிவு செய்து , பேரம் பேசுவதற்கு முன்னால் , பக்கத்தில் இருந்த டீ கடைக்கு போய் டீ சொல்லிவிட்டு , நின்று கொண்டிருந்தேன் ..
அப்போது தான் அந்த அதிர்ச்சியான காட்சியைப் பார்க்க நேரிட்டது ..

ஒரு தொழுநோயாளி ( எப்படியும் வயது நாற்பதுக்கும் மேல் இருக்கும் ) அருகில் படுத்திருந்த ஒரு நாயை புணர்ந்து கொண்டிருந்தார் ... என்னால் அதை நம்பவும் முடியவில்லை ... நம்பாமல் இருக்கவும் முடியவில்லை
இப்படி ஒரு காட்சியை தான் ஏற்கனவே பார்த்ததாக தோழர் ராஜ்மோகன் என்னிடம் சொல்லி இருப்பதால் அதை நம்பியாகவும் வேண்டி இருந்தது .. அருகில் செல்லாமல் டீ குடித்து கொண்டே, அந்த காட்சியை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தேன் ... எனக்கு ஆச்சர்யமான விஷயம் எப்படி அந்த நாய் அவருக்கு ஒத்துழைத்துக் கொண்டிருந்தது என்பது தான் .


சிறிது நேரம் கழித்து நான் அவரை கவனிப்பதைப் பார்த்துவிட்ட அந்த மனிதர் , நாயை விட்டு தள்ளிச் சென்று , அங்கு அவருக்காக , ஏற்கனவே அவர் விரித்து வைத்திருந்தப் பிளாஸ்டிக் பையில் படுத்து கொண்டார் ... சுவாரசியமான விஷயம் சிறிது நேரம் கழித்து அந்த நாயும் அவர் பக்கத்திலேயே போய் படுத்துகொண்டது ..
நுங்கம்பாக்கம் வர நூற்றி இருபது ரூபாய் பேசி ஆட்டோவில் ஏறி விட்டேன் ...அவ்வளவு தான் ..... மீண்டும் வடபழனிக்கு போகும்போதெல்லாம் அந்த மனிதரையும் அந்த நாயையும் தேடுவது எனக்கு பழக்கமாகி போனது ....

அந்த சம்பவம் அதற்கு பிறகு எனக்கு மறந்து போனது ...அதை வேறு ஒரு கோணத்தில் இன்னொரு சம்பவம் எனக்கு நினைவூட்டியது ....



நிகழ்வு இரண்டு :

சென்னை மெரினா கடற்கரை ...
அதே மாதிரி ஒரு இரவு , ஆனால் இது பனிக்காலம் ...
மெரீனாவில் இரவு பத்து மணிக்கு மேல் , பாலியல் விஷயங்கள் நடப்பது எனக்கு ஒன்றும் புதிய செய்தி இல்லை என்றாலும் கூட , அன்று நடந்த விஷயம் கொஞ்சம் வித்தியாசமானது ....

கலங்கரை விளக்கத்திற்கு , கொஞ்சம் முன்பாக , நான் வேறு ஒரு புலனாய்வு செய்தி சேகரிப்புக்காக ( அந்த புலனாய்வு செய்தியை இன்னொரு நாள் சொல்கிறேன் ) , அங்கு உட்கார்ந்திருந்தபோது ,இந்த விஷயம் நடந்ததது ..

ஒரு கல்லூரி மாணவனை போல் இருந்த ஒரு இளைஞன் , என்னிடமிருந்து நூறு மீட்டர் தள்ளி நின்று சத்தமாக போன் பேசிக்கொண்டே , கடற்கரையை சுற்றி கொண்டிருந்தான் ... இது ஒரு பத்து நிமிடத்திற்கு நீடித்தது .. சிறிது நேரம் கழித்து அங்கு , பச்சை புடவை கட்டி , கொஞ்சம் மல்லிகை பூ வைத்திருந்த ( உண்மையாகவே மல்லிகை .. கொஞ்சம் வாடி இருந்தது ) ஒரு சுமாரான பெண் அங்கு வந்தாள் ( எனக்கு சுமாராக தெரிந்தாள் ) .

அந்த பையனும் , இந்த பெண்ணும் கண்களால் ஏதோ பேசி கொண்டார்கள் . எனக்கு விஷயம் புரிந்த அளவிற்கு , அந்த சைகைகள் புரியவில்லை ( வருத்தம் தான் ) .அப்புறம் தான் கவனித்தேன் ... எனக்கு பின்னால் இதை இன்னொரு நபரும் கவனித்து கொண்டிருந்தார் ..


அவர் ஊனமுற்றோர் பயன்படுத்தும் கருவியுடன் அமர்ந்திருந்தார், ( அவர் கால்கள் சரி இல்லை வயது எப்படியும் முப்பத்தி ஐந்து இருக்கும் ) பக்கத்தில் ஒரு பையும் , கையில் கடலை பாக்கெட்டும் இருந்ததது .. எப்படி கடற்கரைக்கு வந்தார் ...துணைக்கு யார் வந்தார்கள் என்றும் தெரியவில்லை ... நாங்கள் இருவரும் அந்த பையனையும் , அந்த பச்சைப் புடவை பெண்ணையும் பார்த்து கொண்டிருந்தோம் ...


சிறிது நேரம் கழித்து இருவரும் தனி தனியாக நடக்க ஆரம்பித்தார்கள் ( கடலை நோக்கி ) .. கொஞ்சம் கொஞ்சமாய் இருவரும் பக்கம் பக்கமாய் வந்து , ஒரு கட்டத்தில் இருவரும் ஜோடி சேர்ந்தே நடக்க ஆரம்பித்தார்கள்.. அவர்கள் பின்னல் போகலாம் என்று எனக்கு இருந்த ஐடியா வை நான் மாற்றி கொண்டேன் .. ஏனெனில் நான் வந்த வேலையும் கெட்டு போய்விடும் என்பதாலும் , அந்த ஊனமுற்ற மனிதரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்ததாலும் (அது தான் உண்மை ) ..


பதினைந்து நிமிடங்கள் கழித்து ,


என் கணிப்பை பொய்யாக்கி விட்டு , அந்த மனிதர் தன் ஊன்றுகோல் உதவியுடன் அவர்கள் சென்ற திசையை நோக்கிச் சென்றார் ..எழுந்து போகும்போது நான் அவரை பார்க்கிறேனா என்பதை கவனித்து கொண்டே நடந்து சென்றார் . யோசித்து பாருங்கள் அவ்வளவு மணல் அடர்த்தியில் . ஊன்றுகோலுடன் அவர் நடந்து சென்றதை ..அது எனக்கு இப்போதும் ஆச்சர்யமான விடயம் தான் ...



இவர் நடுவில் மூச்சு வாங்கி . சற்று நின்று மீண்டும் நடக்க தொடங்கினார் ...
அதற்குள் அந்த இளைஞன் மட்டும் இவரைத் தாண்டிச் சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தான்.( அவர்கள் இருவரும் போய் அப்போதுவரை முப்பது நிமிடம் ஆகி இருந்ததது ..)


அந்த பெண்ணைக் காணவில்லை .. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதை என்னால் பார்க்க முடிந்ததது ...அவ்வளவு தான்.. அந்த இளைஞன் தன் பைக்கில் ஏறி , கிளம்பிவிட்டான் ,, கிளம்பும்போது அவரையும் என்னையும் தனித்தனியாக பார்த்துக்கொண்டே போனான் .. ( என்ன நினைத்தான் என்று தெரியவில்லை )

இந்த மனிதரும் தன் ஊன்றுகோலை வைத்து போய்க்கொண்டே இருந்தார் .. அந்த பெண்ணும் எதிரே வந்தார்.. இவர் ஏதோ அந்த பெண்ணிடம் பேச , இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர். அவ்வளவு தான் .என் கண்களிடமிருது மறைந்து போயினர் .. ( ச்ச .. என்ன வாழ்க்கை இது )


ஒரு நிமிடம் கழித்து . அந்த பெண் பதற்றமாக திரும்பி வந்தார் .நான் என்ன என்னவோ நினைத்தேன் ... அந்த பெண் என்னை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே ( உண்மையிலேயே அப்படித்தான் பார்த்தார் ) என்னை கடந்து சென்று மறைந்து விட்டார்..அவர் ஆட்டோவில் போய் இருக்கலாம் என்பது என் கணிப்பு .. ஆனால் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை ..


பத்து நிமிடம் கழித்து அவரும் கஷ்டப்பட்டு ஊன்றி வந்தார் ...
என்னை பார்த்துக்கொண்டே தான் வந்தார் ..என்னை கடந்து செல்லும் போது , என்னிடம் சொல்வது போல் மெதுவாய் பேசிக்கொண்டே போனார்
.. " நானும் தானே காசு குடுக்குறேன் னு சொல்றேன்...அவளுக்கு அப்படி என்ன கிராக்கி , என்னை பார்த்து ஓடிப் போய்ட்டா " ..

எனக்கு புரிந்தது. இவர் ஊனத்தை எண்ணி ஒதுக்கி விட்டு அவள் போய் இருக்கலாம் என்று ..



இப்போது தான் எனக்கு அந்த தொழுநோயாளி நிகழ்வு ஞாபகம் வந்தது ..


இரண்டு நிகழ்வுகளுக்கும் பொருத்தமான நிறைய விஷயங்கள் உள்ளது ..


காமம் என்பது , சிந்திப்பதையும் , கற்பனையும் தாண்டி , செயல்படுத்துவது என்ற நிலையை எட்டும் போது நிறைய பிரச்சனைகள் நமக்கு வருகிறது .. அதை சரிப்படுத்தவோ , வழிகாட்டவோ , நிறைய நிபுணர்கள் இங்கே உள்ளனர் ..( நாராயண ரெட்டி , காமராஜ் , ஷாலினி ,வகையறாக்கள் )..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு போன் செய்து சந்தேகம் கேட்கிற அளவிற்கு பாலியல் குறித்த புரிதல் வளர்ந்திருக்கிறது ...
ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமாகி இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் எனக்கு தெரியவில்லை ..




நாம் சாலையில் அன்றாடம் பார்க்கிற தொழுநோயாளிகள் , பிச்சைகாரர்கள், சுயநினைவோடு ஆனால் தெளிவின்றி திரிபவர்கள் , என இன்னும் பட்டியல் நீளும் இவர்களது பாலியல் தேவைகள் எப்படி பூர்த்தியாகின்றன ?
நாயோடு உறவு கொண்ட அந்த மனிதரின் பாலியல் தூண்டலை எதனால் சரிப்படுதவோ , ஈடுகட்டவோ முடியும் ?
நிச்சயமாய் அவர் அதை விரும்பி செய்திருக்க வாய்ப்பு உண்டா என்றால் தெரியவில்லை ..

ஆனால் அந்த மனிதர்களின் பாலியல் தேவைகள் சமூகத்தை எதிர்நோக்கியதாக இல்லை .. யாரும் தொடவே அஞ்சும் அவருக்கு அந்த எதிர்பார்ப்பும் இருக்கிற வாய்ப்பும் குறைவு ..
அவரோடு பழகி , அவரோடு உண்டு , அவரோடு திரிகிற , அந்த நாயிடம் தான் அவரும் தன் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது ..



இரண்டாவது நிகழ்வு இன்னும் மோசம் ,,,

திருமணம் ஆகாத உடல் ஊனமுற்ற ஒரு ஆண் /பெண்ணின் பாலியல் கற்பனைகளுக்கு , இந்த சமூகம் என்ன வடிகால்களை ஏற்படுத்தி இருக்கிறது ?

நிச்சயமாய் நான் கடற்கரையில் சந்தித்த அந்த மனிதர், உடல் தேவைக்காக தான் நிச்சயம் இங்கு வந்திருப்பார் ..ஏன் எனில் கடற்கரைக்கு அந்த நேரத்தில் தனியாக, அவ்வளவு சிரமப்பட்டு , காத்திருக்க , வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை ...

இது தவறான கணிப்பாக கூட இருக்கலாம் ..

ஆனால் அந்த பெண்ணால் அவர் புறக்கணிக்கப்பட்டது அவரை விட எனக்கு அதிகம் வலியை ஏற்படுத்தியது ..

ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கு,

தற்போது இங்கு கிடைக்கிற சுதந்திரம் ! ( கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடும்போது ) இந்த வகை மனிதர்களுக்கு கிடைக்காமல் போய் இருப்பது ஜீரணிக்க முடியாத கவலை ..

ஒரு வேளை, ஒரு ஊனமுற்ற மனிதர் ஒரு பால் ஈர்ப்பு கொண்டவராகவும் இருந்தால் அவர் நிலைமை இன்னும் மோசம் ....

அதே போல பெண்களை பொருத்தமட்டில் மேற்கண்ட எல்லா தரப்பிலும் அவர்கள் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது ..அது பற்றிய சிந்தனையை பேசினாலே நம்மை பண்பாட்டு விரோதி ஆக்கிவிடுவார்கள் ...

இதை பற்றி யாரவது பேசினால் , மேற்கண்ட அனைவருக்கும் வாழ்வாதார பிரச்சனைகளே தீர்க்க முடியாததாக இருப்பதை சுட்டி காட்டி இதை உதறிவிடுவார்கள் ..
உண்மையில் உணவு ,உறக்கம், உறைவிடம் ,இவை மூன்றும் நல்ல வாழ்க்கைகான அடிப்படையை போலவே , பாலியல் தேவை தொடர்பான் வசதிகளும் அவசியமாகிறது ..

சராசரி மனிதர்களுக்கே மூன்றாவது தளம் (Space ) தேவைப் படும்போது இப்படி பட்ட மனிதர்களுக்கு அது கட்டாய அவசியமாகிறது என்பதை நாம் நினைவில் வைத்துகொள்ள மறந்து போகிறோம் .. நாம் நம் , பிள்ளைகளோ ,நண்பர்களோ , உறவினர்களோ, இப்படி இருந்தால் கூட நாம் அது குறித்து சிந்திப்பதில்லை ..


" சரியாய் பூர்த்தி செய்யபடாத பாலியல் தேவைகளும் ,
நிரம்பி வழிகிற பாலியல் ஆசைகளும் " தான் இந்த் சமூகத்தில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன என நினைக்கிறேன் .


வடிகால்கள் என்பவை எல்லா காலங்களிலும் , எல்லா மனிதர்களுக்கும் உரியது .., வடிகால்களை உருவாக்காமல் இருப்பதும் , இருப்பவற்றை பயன்படுத்தாமல் இருப்பதும் , சிலரை பயன்படுத்தாமல் இருக்க விடுவதும் , ஆரோக்கியமான சமூகத்துக்கான அறிகுறி இல்லை ..

இந்த் கட்டுரையை ஒரு பெண்ணின் , ( ஊனமுற்ற பெண்ணின் / ஒரு பால் ஈர்ப்பு கொண்ட பெண்ணின் ) பார்வையில் எழுத , இந்த சமூகம் எனக்குள் இட்டு நிரப்பி இருக்கிற , தடைகளை உடைத்து எறியவே , இந்த கட்டுரையை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்..


. நான் இங்கு எந்த தீர்வையும் முன் வைக்கவில்லை ..காரணம் அது எனக்கு தெரியவில்லை ..ஆனால் தீர்வு ஒன்று வேண்டும் என்று மட்டும் எனக்கு தெரியும் ...


எல்லோருக்குள்ளும் இங்கு காமம் உறைந்துகிடக்கிறது .. எல்லோருக்கும் சரிசமமாக ,
அதை தட்டி எழுப்பக்கூடிய தூண்டல்களை , ஒவ்வொரு தலைமுறையிலும் ,அதிகமாகவே உருவாக்க தெரிந்த இந்த சமூகத்துக்கு , அதை நெறிப்படுத்தவும் தெரிந்திருக்கவேண்டும் ..இல்லையேல் இந்த சமூகத்தில் வாழ்கிற நாம் , நம்மை மனிதர்கள் என்று சொல்லி கொள்வதற்கு தகுதிஆனவர்கள் இல்லை என்பதாவது தெரிந்திருக்கவேண்டும்..

நான் இந்த கட்டுரையை நிறைவு செய்ய போவதில்லை.. நிறைவை நோக்கி பயணிக்க விட்டுவிட போகிறேன்.. நீங்களே நிறைவு செய்து கொள்ளுங்கள் .. ஏனெனில் நான் பேசிக்கொண்டிருப்பதும் ஒரு வகை ஜனநாயகம் தான் ..அது நாம் பேச மறந்த
" பாலியல் ஜனநாயகம் "

19 comments:

  1. ஊனமுற்ற அந்த மனிதருக்கு ஏன் திருமணம் ஆகி இருக்க கூடாது? திருமணம் ஆகியும் விலை மாதுவை நோக்கும் கீழ்த்தரமான மனிதனாகவும் இருக்கலாம் அல்லவா?

    தொழுநோயாளி அந்த நிலைக்கு வருவதற்கு அவன் தானே காரணம்?


    காமம் என்றபோது மட்டும் அதிகமாக முயற்சி எடுக்கும் இவ்வகை மக்களுக்கு மற்ற மற்ற முயற்சிகள் மட்டும் எப்படி தோற்றுபோகுது?

    மேலோட்டமாய் பார்த்ததை பதிய வைத்திருகின்றாய், நீ கூறியவர்கள் லட்சங்களில் ஒருவர், பிற சிந்தனைகள் இல்லாதவர்கள், அவ்வளவுதான்.
    கல்வி மட்டுமே மாற்றம் தரமுடியும் கலவியால் முடியாது, இவர்களுக்கு தேவையானது தீர்த்துக்கொள்ள தாகம் அல்ல,


    anyway nice drafts, you must write about something different for everybody go to heaven not to hell.,,,,m

    ReplyDelete
  2. My wishes to your new endeavor.

    I hope as usual the society will do nothing for somebody's personal needs.

    But speaking and reading about these things atleast will make an impact to others to behave appropriately.

    To Mr. NAFIL

    SEX is more about mind than body. I can say there is no one in this world is clean in their heart, doesnt matter whether he/she is married or unmarried.Because everybody at a situation might have dremt of somebody. So not just people who are looking for call girls are bad.

    Still india marching pride at the second place in population though most of us are educated. To buy a pack of condoms itself is still considered as a shy issue. What education can do now, as we have been educated for atleast 3 decades.

    ReplyDelete
  3. நடந்த இருவேறு நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி சிந்தித்த விதம் அருமை...சிந்தனை வளமாக வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. I had thought of writing about such issues. postponed mostly due to laziness and least due to hesitation. Great Insight anna. I thought of giving the first comment, but this power failure, dropped me middle,and now, about the topic->

    நிச்சயமாய் அவர் அதை விரும்பி செய்திருக்க வாய்ப்பு உண்டா என்றால் தெரியவில்லை ../// there are some persons, who have this tendency, so we cant say that it was just out of non-availability that he approached the dog.

    பாலியல் ஜனநாயகம்/// doesn't it mean that that woman also has her rights either to accept or reject him. after all he is not in love with her. sex is purely materialistic and means business, in this context.

    and , i don't think sex is a necessity. with a population of 600 crores in this earth, i think it is a luxury, because, we don't approach sex only as a tool of reproduction.

    ReplyDelete
  5. Dear Mr.Nelson

    I would like to comment something on your comment.

    "sex is purely materialistic and means business, in this context."

    If this is the case that girl might have accepted that handicapped Guy. But its not so.
    I don't think this as Materialistic and business context.

    Sex is not luxury for all but for the rich who can spend 1000 and 1000. For a normal person it is a needful thing.

    ReplyDelete
  6. Nelson,
    நீ பேசும் போது உன் கருத்துகளை ஆழமாக வெளிப்படுத்தும் பாங்கு, உன் எழுத்தில் இருக்குமோ இருக்காதோ என்ற எண்ணம் உன் blog படிக்கும் முன்னர் இருந்தது . ஆனால் படித்த பின் என் எண்ணம் பொய்யானது .

    சமூகத்தால் தொடப்படாத அல்லது தொட யோசிக்கும் தளத்தில் ஆழமான கருத்துகளை பதிவு செய்ததற்கு வாழ்த்துகள்...

    அடுத்த உனது blog க்கு எதிர்பார்புகளுடன்....

    ReplyDelete
  7. Hello Nelson,

    Nan inga padicha sambavangal enaku pudiathu, but pathinthathu...
    Ungal muyarchiku vazthukal,,,

    Parvai konam pakkam ellam manathai sinthika thoodum,,
    Manithanai manithanai vaazha cheium..

    Pothuvave ungala paratie pazhagina enaku itha comment panna theriala..

    Nijamave ithu therikum pakkam,,

    Pakkum palaril silaraiyavathu sinthika cheiyum..

    Padikum palaril silarin karuthaiyavathu matrum,,

    Ententrum ethirparpudan

    ReplyDelete
  8. @john, i stand by my word, coz, she did not pity on the disabled and accept him. she had the free will to choose and hence what "other" thing could you that would replace "business/materialsitic" here?

    For a normal person it is a needful thing.// aren't there people who live without it??

    apram, mr nu ellam sollaathinga..plss

    @nelson anna, i'm really proud that we both have same name. besides your "coolness" you have in-depth thought process and analytical ability.. kudos to you..

    ReplyDelete
  9. Dear Nelson(hope this is fine),

    I appreciate that you would like to stand in your thought. what I wanted to say is, if SEX is just business and materialistic means, for sure that lady might have accepted that guy, not only him she can accept anybody (even the leprosy guy). But she didnt. Because there only money is an issue. Something else she expects from men which is apart from Money, and i think thats what induced x.nelson to write about that issue.
    Hope im clear.

    "aren't there people who live without it??" I accept. There are a few, really a few. But even those must be at least thinking of doing this. Im sure nobody, really NOBODY can claim that im completely free from sexual thoughts.

    Im sorry. im not countering anybody. I take this as a platform to express My thoughts and learn to think.

    ReplyDelete
  10. நன்றி ஜான் .. நீ சொல்வதை என்னால் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் என்னால் முடிகிறது .

    @ நெல்சன்
    நன்றி நெல்சன் .. பெயரில் இல்லை வாழ்க்கை ..ஆனால் பெயர் பெறுவது தான் இங்கு வாழ்க்கை

    ReplyDelete
  11. Dear John, As I always say ( or use this phrase to escape :D) "views differ for each one". So, I dont take it as any encounter at all. Cheers :)

    thats what induced x.nelson to write about/// you know what, I'm also X.Nelson. ( we have once wondered about this strange coincidence, do you remember Nelson bro?? ) :D

    ReplyDelete
  12. s .. i remembered .. wonderful thing is xavier the father to the both nelson

    ReplyDelete
  13. hi nelson am very glad to post on ur comment.. really great penned.. sex s not an essential but tats an "emotional" we need emotion, not oftenly..

    ReplyDelete