About Me

My photo
சொல்லிக் கொள்கிற அளவிற்கு எதுவும் இல்லை ... மற்றவர்கள் சொல்ல வேண்டிய அளவிற்கு ஏதாவது செய்யணும் .... ( ஹ்ம்ம் ... என்னத்த செஞ்சு ..._)

Sunday, July 31, 2011

பற்றி எரிகிறது திநகர்
ஆயிரக்கணக்கானோர் பலி

தீயணைப்பு வாகனம் கூட செல்ல

முடியாமல் ஆயிரக்கணக்கானோர்

பலியான பரிதாபம்.முறைப்படுத்தப்படாத

கட்டிடங்களால் விபத்து நேர்ந்ததாக

முதல்கட்டதகவல்கள் தெரிவிக்கின்றன

பலியானோர் குடும்பத்திற்கு தலா

ஒரு லட்சம் நிவாரண நிதி

அளிக்கப்படும் என தமிழகஅரசு

அறிவித்துள்ளது.

இப்படி ஒரு நாள் நீங்கள் செய்தி வாசிக்க நேரிடலாம் ....அப்போது உங்கள் அதிர்ச்சியை

குறைப்பதற்காகவே இப்போது இந்த கட்டுரை என்று நீங்கள் எடுத்து கொள்ளலாம் ..

அரசு அதிகாரிகளின் ஊழல் போக்கும் ,முதலாளிகளின் பேராசையும் ஒரு நகரை

எப்படி கெடுத்து குட்டி சுவராக்கி இருக்கின்றன

என்பதற்கு தியாகராய நகர் மிக சிறந்த உதாரணம்...

விஷயத்துக்கு போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன ப்ளாஷ் பேக் ...

இப்போ சரவணா ஸ்டோர்ஸ் இருக்குற எல்லா ஏரியாவும் ஒரு காலத்துல

மாம்பலம் ஏரியா இருந்ததது ...

அதுக்கு அப்புறம்

திராவிட இயக்கத்தவரில் மிக முக்கியமானவரும் நீதிக்கட்சியைத் ஆரம்பித்தவர்களில் ஒருவருமான சர் பி.தியாகராயாவின் நினைவா அந்த ஏரியாவுக்கு அவர் பெயர வெச்சாங்க .. அப்போ எல்லாம் பொருட்கள் வாங்க கொத்தவால் சாவடிக்கு போகணும் ..

சைதாபேட்டையும், பாரிஸ் கார்னரும் தான் அப்போ வணிக பகுதி .. அதுக்கு அப்புறம் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் ல வெளிஊர் ரயில் வண்டிகள் நிக்க ஆரம்பிச்சதால, வந்து எறங்குற மக்கள்கிட்ட வியாபாரம் பண்ண சின்ன சின்ன நடை பாதை கடைகள் முளைச்சது ...

அப்புறம் கடை வீதி உருவாச்சு .. அந்த கடை வீதி சத்தம் தாங்க முடியாம அங்க பக்கதுல இருந்த ஆட்கள் வீடுகளை வித்துட்டு வேற ஏரியாகு போய்டாங்க ...வாங்குனவங்களும் அதை வியாபாரிகளுக்கு வித்துட்டாங்க ...

1985 டு 1990 ல தான் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி கடைகள் அங்க முளைக்க ஆரம்பிச்சது .....அவ்ளோதான் ஸ்டோரி .. கம் டு தி பாயிண்ட் .....

சென்னையிலேய சுற்றுச்சூழல் சீர்கெட்ட பகுதி என மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அடையாளம் காட்டப்பட்டுள பெருமைக்குரிய பகுதி தி நகர் தான் ...

சீப்பிலிருந்து செருப்பு வரை சென்னை மக்களின் அத்தனை தேவைகளுக்கும் புகலிடம் இந்த அங்காடித்தெரு. பாண்டி பஜாரும், உஸ்மான் சாலையும், ரங்கநாதன் தெருவும் தான் தி.நகரின் மிக முக்கியமான வணிகமையங்கள். அதிலும் மிக முக்கியமானது ரங்கநாதன் தெரு.

ஆடிக் காற்றில் கூட மூச்சுவிட தவிக்கும் அளவுக்கு நெரிசல் மிகுந்ததுதான் இந்த தெரு. பண்டிகை காலம், விழாக்காலங்கள் என இல்லாமல் வார விடுமுறை நாட்களில் கூட மக்கள் இந்த தெருவுக்குள் ஊர்ந்துதான் செல்ல வேண்டும்.

ஒரு சில ஞாயிற்றுக்கிழமைகளில் ரங்கநாதன் தெருவுக்கு வந்துசெல்லும் மக்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்திற்கும் மேல். ரெங்கநாதன் தெரு இந்த அளவிற்கு மோசமானதிற்கு யார் காரணம் ?

எல்லா பெரிய நிறுவனங்களும் சொல்லும் ஒரே பதில் நடைபாதையை அடைத்துக்கொண்டிருக்கும் சிறுவியாபாரிகளும், நடைபாதை வியாபாரிகளுமே இதற்கு காரணம் என கைகாட்டுகின்றனர்

...ஆனால் உண்மையில் நடந்துகொண்டிருப்பது என்ன.....

ஒரு நாள் காலைல 6 மணிக்கே ரங்கநாதன் தெருவுக்கு போய் பார்த்தா

40 அடி அகலத்திற்கு அகன்று விரிந்திருகிறது ரங்கநாதன் தெரு....காலை 6 மணிக்குதான் இந்த நிலை... நேரம் செல்லச் செல்ல இந்த 40 அடி சாலை 20 அடி தெருவாக சுருங்கிவிடுகிறது... இதற்கு நடைபாதை வியாபாரிகள்தான் காரணமா? இல்லவே இல்லை என்கின்றனர் அவர்கள்...

எந்த விதிமுறைகளையும் பின்பற்றாத பெரிய நிறுவனங்களால்தான் தங்களது வாழ்வாதாரமும், தி.நகரின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது என்பது நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள் புகார்...

ஏற்கனவே இப்படி நடைபாதை வியாபாரிகள் தொடர்பான பிரச்சனையை தீர்கவே அண்ணா நகர் பஜார் ,பர்மா பஜார் ,பாண்டி பஜார் போன்றவை உருவாக்கப்பட்டது .. ஆனாலும் பிரச்சனை தீரவில்லை .. இப்போதும் பாண்டி பஜாரில் கூட நடைபாதை வியாபாரிகளுக்காக வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது ..

( கட்டி முடிக்கப்பட்டு அது வழக்காக மாறி தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது ).

என்ன தீர்ப்பு வந்தாலும் எல்லோரும் அங்கு போனாலும் இந்த பிரச்சனை தீராது ..ஏனெனில் சந்தை வணிகத்தில் , நடைபாதை கடைகள் என்பது பல நூறாண்டுகள் வரலாறு கொண்ட ஒரு கலாசாரம் .. அதை தனிமைபடுத்தி ஒதுக்கி வைப்பது சாத்தியமல்ல .. மேலும் சென்னையில் மட்டும் சுமார் ஒரு லட்சம்நடைபாதை வியாபாரிகள் உள்ளனர் .. அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பார்க்காமல் சமூக பிரச்சனையாக பார்க்க வேண்டியது நமது கடமை .....




ரெங்கநாதன் தெருவின் நில ஆக்கிரமிப்பு , விதிமுறை மீறல்கள் தொடர்பாக உயர்நீதி மன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு தியாகராய நகரில் மட்டும், 64 வர்த்தக நிறுவனங்கள்,

(அதுக்கு அர்த்தம் அவ்ளோ தான்னு இல்ல .. ரொம்ப மோசமா

எந்த விதிகளையும் மதிக்காதவர்கள் னு )

எந்த வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் கட்டப்பட்டுள்ளது என குற்றம்சாட்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரம்மாண்டமாக தள்ளுபடி அளிப்பதாய் பகட்டாக விளம்பரம் செய்யும் ஒரு குறிப்பிட்ட துணிக்கடையை ( சரவணா ஸ்டோர்ஸ் தான் ..கிசு கிசுப்பு மாதிரி சொன்னா தான் நல்லா இருக்கு ) எடுத்துக் கொள்வோம்.

இந்த துணிக்கடையின்,இந்த தெரு அளவின் அடிபடையில் மொத்த மனை பரபரப்பளவில் 50 சதவீதம் மட்டுமே கட்டடம் கட்ட மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. ஆனால் அந்த நிறுவனமோ அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, 85 சதவீத இடத்தில் கட்டடம் கட்டியுள்ளது.

மிகவும் மக்கள் நெருக்கடியான தெருக்களில் குறிப்பிட்ட அடுக்கு கொண்ட கட்டடங்களே கட்டப்பட வேண்டும் என்பது விதி. அந்த விதிமுறையையும் புறந்தள்ளிய அந்த நிறுவனம், 3 அடுக்கு கட்டடப்பட வேண்டும் என்ற உத்தரவை மீறி, 7 அடுக்குகள் கட்டி, அதற்கு மேல் ஊழியர்களுக்கான தங்கும் அறையும் கட்டியுள்ளது. அதுக்கு மேல ஒரு storer ரூம் வேற ..

அந்த நிறுவனத்தின் மொத்த பரப்பளவையும் கணக்கில் கொண்டு 266 கார்கள் நிறுத்துவதற்கு நிலம் ஒதுக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் ஒரே ஒரு கார் மட்டுமே நிறுத்துவதற்கு இடத்தை ஒதுக்கி அரசு விதிமுறைகளை கேலிக் கூத்தாக்கியுள்ளது அந்த குறிப்பிட்ட துணிக்கடை நிறுவனம்.நோட் திஸ் பாயிண்ட் .. அந்த ஒரு கார் பார்கிங் எடத்துல தான் இப்போ ஐஸ் கிரீம் கடை இருக்கு ....

மேலும், கட்டடத்தின் 4 பக்கவாட்டிலும் 22 மீட்டர் இடைவெளி விட வேண்டும் என்ற நிலையில், அந்த நிறுவனம் வெறும் 4 மீட்டர் மட்டுமே பெயரளவில் ஒதுக்கியுள்ளது.

இத்தனை ஆக்கிரமிப்புக்களையும், தாண்டி துணிகள் விற்பனையில் வரும் வருமானம் போதாதென்று, அந்த நிறுவனம் திண்பண்டங்கள் கடையை வெகு தைரியமாக (! )சாலையில் அமைத்து மக்கள் நெரிசலுக்கு மேலும் வழிவகுத்துள்ளது.

இது வெறும் சாம்பிள் தான் ..

(குறிப்பு : சமூக பிரச்சனைகளை தவிர எனக்கும் சரவணா ஸ்டோர்ஸ்க்கும் வேறு வாய்க்கால் தகராறு எதுவுமில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் ..)

.. ஏற குறைய எல்லா நிறுவனங்களுமே இதே தப்ப தைரியமா

பண்ணிருக்காங்க ..

நல்லி சில்க்ஸ் கு ஒதுக்கிய கார் பார்கிங் எண்ணிக்கை 64 .. அவங்க எடம் ஒதுக்கி உள்ளது வெறும் நாலு கார் க்கு மட்டும் .. அங்கயும் நல்லி குப்புசாமி தன வண்டிய விட்டுடுவார்.

என்ன பிரச்சனை நா , இவங்க ஆக்கிரமித்துள இடத்தை மீட்டாலே , நாம கை வீசி நடந்து , நடை பாதை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி குடுத்து , தைரியமா போயிட்டு வரலாம் ..

இவ்வளவு மக்கள் நெருக்கடி அதிகம் மிகுந்த ரெங்கநாதன் தெருவில் தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழக்ககூடாது என்பதே அனைவரின் கருத்து.



ஆனால் அதனையும் மீறி கடந்த 2008 ஆம் ஆண்டு ரெங்கநாதன் தெருவில் உள்ள பிரம்மாண்ட துணிக்கடையில் நிகழ்ந்த தீ விபத்தில், உயிரிழப்பு ஏதும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் (உண்மையில் அங்கு வேலை பார்த்த மூன்று பேர் இறந்ததாக உறுதி படுத்தப்பட்ட தவல்கள் நமக்கு தெரிவிகின்றன ..)



இதனால் அப்போது ஏற்பட்ட பீதி கொஞ்சம் நஞ்சமல்ல... தீயணைக்கும் வாகனம் கூட சம்பவ இடத்தை நெருங்க முடியாமல் ஆக்கிரமிப்புகளில் மூழ்கியிருந்தது ரெங்கநாதன் தெரு....

மேலும், தீ விபத்து நிகழும் போது, உள்ளே சிக்கியவர்கள் படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்த படிக்கட்டுகளிலும் பொருட்களை அடுக்கி வழியை மறித்து, தப்ப நினைப்பவர்களின் உயிருக்கும் உலை வைக்கிறது இது போன்ற பிரம்மாண்ட வர்த்தக நிறுவனங்கள்....

.நம்பிக்கை இல்லனா ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் போய் பாருங்க .. ஆறாவது மாடில நிக்க முடியாம மூச்சு முட்டுது .....எல்லா படிகட்டுலையும் பொருட்கள் இருக்கும் ...

இவ்வளவு பெரிய தீ விபத்து நிகழ்ந்த பிறகு, ரெங்கநாதன் தெருவில் எத்தனை கடைகளில் முறைப்படி தீயணைப்பு வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்டது.

அப்போது மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட ரெங்கநாதன் தெருவில் உள்ள 38 கடைகளில் ( ஏழு மாடி சரவணா , ஜெயச்சந்திரன் , ஹரிஹந்த் எல்லாமே தான் )

எந்தவித தீயணைப்பு வசதிகளும் செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது.(நமக்கு இது முன்னாடியே தெரியும் ..)

அந்த நிறுவனங்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அந்த நிறுவனங்கள் காற்றில் விடப்பட்ட சிறகாக நோட்டீசை பறக்கவிட்டு விட்டன. இது வரை எந்த ஒரு நிறுவனமும் நோட்டீசுக்கு பதிலளிக்கவில்லை. அதை பத்தி யாரும் கவலையும் படல ....

மக்கள் சேவையில் உள்ள நிறுவனங்களில் தீ விபத்தைத் தடுக்கும் வசதிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று முறையான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும், அந்த விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் உயிரோடு விளையாடிப் பார்க்கும் வர்த்தக நிறுவனங்கள் தான் இங்கு அதிகம்.

(முதலாளின்னு ஆயிட்டா இப்படி எல்ல்லாம் பண்ணனும் போல )

எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ, அல்லது அரசு அதிகாரிகளோ அது குறித்து கவலைப்படுவதில்லை என்பதை அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் நமக்கு நினைவுபடுத்தி வருகின்றன.

ஒரு சவால் .. தி நகர் ல ஏதாவது ஒரு தெருவுல தீயணைப்பு வண்டி உள்ள போய்ட முடயும்னா நான் எழுதுறதையே விட்டுவிடுகிறேன் ...(அப்பாடான்னு பெருமூச்சு விட வேண்டாம் )

பாலம் கட்டும் போது, அந்த பாலத்திற்கும் கடைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை கூட கணக்கில் கொள்ளாமல் அவசரகதியில் பாலம் கட்டப்பட்டுள்ளதும், நெருக்கடிக்கு ஒரு முக்கிய காரணம்.

இதனால் அந்த குறுகிய பாதையில் தீயணைப்பு வாகனங்களோ, ஆம்புலன்ஸ் வாகனங்களோ அவசர தருணத்தில் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பாலம் கட்டப்படாமல், பொதுமக்களுக்கு தேவையற்ற பகுதியில் பாலம் கட்டப்பட்டுள்ளது என்பது பொது மக்கள் கருத்து ( நானும் பொது மக்கள் ல ஒருத்தன் தானே ) ..

என்ன தாங்க பண்றது ?

1. பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் விதிமுறைகள் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக மீறிய பிரம்மாண்ட வர்த்தக நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை எந்தவித பாரபட்சமும் பாராமல் மீட்டால் தான், தியாகராய நகர் சிறிதளவேனும் சுதந்திரமாக சுவாசிக்க முடியும். இதனையே சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

2 . சென்னை தியாராய நகரில் 30 சதவீதம் மட்டுமே வர்த்தகப் பகுதியாக உள்ளது. மீதமுள்ள 70 சதவீத குடியிருப்பு வாசிகள் சந்திக்கும் பிரச்சினைகளும், பேராபத்துகளும் சொல்லில் அடங்காது.

கோயம்பேடு சந்தைக்கு மாதம் ஒருநாள் விடுமுறை விடுவது போன்று தியாகராய நகர் வர்த்தக நிறுவனங்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை விட்டால் மட்டுமே தங்களுக்கு அமைதி கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி குடியிருப்புவாசிகள்.

3. தியாகராய நகரின் மற்றுமொரு பிரச்சினையாக பொதுமக்களால் பார்க்கப்படுவது நாள் முழுவதும் நிலவும் போக்குவரத்து பிரச்சினை.

இதற்கு திட்டமிடாமல், மக்களின் ஆலோசனைகளைப் பெறாமல் வெறும் சாதனைக்காக மட்டுமே கட்டப்பட்ட தியாகராய நகர் மேம்பாலத்தை அகற்றுவதும், அந்த ஒட்டு மொத்த பகுதியையும் வணிக மண்டலமாக அறிவித்து, அரசு பேருந்து போக்குவரத்தை மட்டும் அனுமதிப்பதே தீர்வாகும் .

..பல புகழ் மிக்க உலக சந்தைகள் ல பொது போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி ..

4. மேலும் பொதுமக்கள் வந்து செல்லும் வர்த்தக நிறுவனங்களில் முறையான தீயணைப்பு வசதிகள் இல்லாவிடில் அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற குரலும் சமூக ஆர்வலர்களிடையே வலுக்கிறது.

எல்லா விதிமுறைகளையும் முறையாக பின்பற்றிய துணை நகரங்களை உருவாக்குவதும் தியாகராய நகர் பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வாக அமையும். முடிஞ்சா எல்லா கட்டிடத்தையும் தூக்கி செங்கல் பட்டுபக்கம் வெச்சிடலாம் னு கூட சில பேர் கருத்து சொன்னங்க .

so....


அட்சய திருதையோ , ஆடி தள்ளுபடியோ , சேர்த்து வெச்ச கொஞ்ச காசுல

மலிவா பொருள்

வாங்கலாம் னு தான் அம்பத்தூர், மதுரவயல் ,னு தொலை தூரத்துல இருந்தோ , வேறு மாவட்ட மற்றும் மாநிலங்கள்ல இருந்தும்

ஒவ்வொரு நாளும்

லட்சகணக்கான மக்கள் வராங்க ...

ரங்கநாதன் தெருவில விக்கப்படும் எந்த ஒரு பொருளையும் விட விலை மதிப்பில்லாதது ,

பொருட்கள் வாங்க வர்ற மனித உயிர் ...இது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இல்ல,

குறைந்த சம்பளத்துல , தென் மாவட்டங்கள இருந்து பிரமாண்டமான

கடைகள்ளவேலை பாக்குற ஆயிரகணக்கான தொழிலாளர் தோழர்களுக்க்காகவும் தான் .. ஏதாவது விபத்து நடந்த பிறகு , நிவாரணநிதி பத்தி யோசிகிரத்துக்கு பதிலா

அரசு ஏதாவது நடவடிக்கை

எடுத்தாக வேண்டும்...



மாரல் ஒப் தி ஸ்டோரி ...

எந்த நாடாக இருந்தாலும் சரி , எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி ,ஏழைகளின்

உயிர் குறித்து கவலைப்பட யாரும் தயாராக இல்லை ....

----------------------------------------------------------நெல்சன் சேவியர்------------------------------------------------------------

Saturday, January 8, 2011

உறைந்து கிடக்கிறதா காமம் ?







இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தோழர் ராஜ்மோகன் இந்த விஷயத்தை பற்றிச் சொன்னபோது நான் நம்பவில்லை ... இப்போது அதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை ...ஆனால் தொடர்ச்சியாக நான் பார்த்த இந்த இரண்டு நிகழ்வுகளும் அது குறித்த விவாதத்தை என்னுள் ஏற்படுத்திவிட்டது ...


காமம் குறித்து பேசுவதும் ,எழுதுவதும் ,வாசகனை எப்போதும், ஈர்க்கும் என்று ,தெரிந்தே எழுதும் , எத்தனையோ எழுத்தாளர்கள் , இது குறித்தும் நிறைய எழுதி இருப்பார்கள் எனக்கு வேறு நிறைய வேலைகள் இருந்ததால் அதை நான் படிக்க மறந்திருக்கலாம் ..
நான் படிக்க மறந்ததை அன்று பார்க்க நேரிட்டது ...

நிகழ்வு ஒன்று :

கடந்த ஆண்டில் ,மழைக்காலம் ஒன்றின், மழை பெய்யாத நாளில் , இரவு எப்படியும் பன்னிரண்டு மணிக்கு மேல் இருக்கும் .. நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு , நிகழ்ச்சி அமைப்பாளரை திட்டிக்கொண்டே நான் வடபழனி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன் ..

எந்த பேருந்துகளும் வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் , ஆட்டோவில் போகலாம் என்று முடிவு செய்து , பேரம் பேசுவதற்கு முன்னால் , பக்கத்தில் இருந்த டீ கடைக்கு போய் டீ சொல்லிவிட்டு , நின்று கொண்டிருந்தேன் ..
அப்போது தான் அந்த அதிர்ச்சியான காட்சியைப் பார்க்க நேரிட்டது ..

ஒரு தொழுநோயாளி ( எப்படியும் வயது நாற்பதுக்கும் மேல் இருக்கும் ) அருகில் படுத்திருந்த ஒரு நாயை புணர்ந்து கொண்டிருந்தார் ... என்னால் அதை நம்பவும் முடியவில்லை ... நம்பாமல் இருக்கவும் முடியவில்லை
இப்படி ஒரு காட்சியை தான் ஏற்கனவே பார்த்ததாக தோழர் ராஜ்மோகன் என்னிடம் சொல்லி இருப்பதால் அதை நம்பியாகவும் வேண்டி இருந்தது .. அருகில் செல்லாமல் டீ குடித்து கொண்டே, அந்த காட்சியை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தேன் ... எனக்கு ஆச்சர்யமான விஷயம் எப்படி அந்த நாய் அவருக்கு ஒத்துழைத்துக் கொண்டிருந்தது என்பது தான் .


சிறிது நேரம் கழித்து நான் அவரை கவனிப்பதைப் பார்த்துவிட்ட அந்த மனிதர் , நாயை விட்டு தள்ளிச் சென்று , அங்கு அவருக்காக , ஏற்கனவே அவர் விரித்து வைத்திருந்தப் பிளாஸ்டிக் பையில் படுத்து கொண்டார் ... சுவாரசியமான விஷயம் சிறிது நேரம் கழித்து அந்த நாயும் அவர் பக்கத்திலேயே போய் படுத்துகொண்டது ..
நுங்கம்பாக்கம் வர நூற்றி இருபது ரூபாய் பேசி ஆட்டோவில் ஏறி விட்டேன் ...அவ்வளவு தான் ..... மீண்டும் வடபழனிக்கு போகும்போதெல்லாம் அந்த மனிதரையும் அந்த நாயையும் தேடுவது எனக்கு பழக்கமாகி போனது ....

அந்த சம்பவம் அதற்கு பிறகு எனக்கு மறந்து போனது ...அதை வேறு ஒரு கோணத்தில் இன்னொரு சம்பவம் எனக்கு நினைவூட்டியது ....



நிகழ்வு இரண்டு :

சென்னை மெரினா கடற்கரை ...
அதே மாதிரி ஒரு இரவு , ஆனால் இது பனிக்காலம் ...
மெரீனாவில் இரவு பத்து மணிக்கு மேல் , பாலியல் விஷயங்கள் நடப்பது எனக்கு ஒன்றும் புதிய செய்தி இல்லை என்றாலும் கூட , அன்று நடந்த விஷயம் கொஞ்சம் வித்தியாசமானது ....

கலங்கரை விளக்கத்திற்கு , கொஞ்சம் முன்பாக , நான் வேறு ஒரு புலனாய்வு செய்தி சேகரிப்புக்காக ( அந்த புலனாய்வு செய்தியை இன்னொரு நாள் சொல்கிறேன் ) , அங்கு உட்கார்ந்திருந்தபோது ,இந்த விஷயம் நடந்ததது ..

ஒரு கல்லூரி மாணவனை போல் இருந்த ஒரு இளைஞன் , என்னிடமிருந்து நூறு மீட்டர் தள்ளி நின்று சத்தமாக போன் பேசிக்கொண்டே , கடற்கரையை சுற்றி கொண்டிருந்தான் ... இது ஒரு பத்து நிமிடத்திற்கு நீடித்தது .. சிறிது நேரம் கழித்து அங்கு , பச்சை புடவை கட்டி , கொஞ்சம் மல்லிகை பூ வைத்திருந்த ( உண்மையாகவே மல்லிகை .. கொஞ்சம் வாடி இருந்தது ) ஒரு சுமாரான பெண் அங்கு வந்தாள் ( எனக்கு சுமாராக தெரிந்தாள் ) .

அந்த பையனும் , இந்த பெண்ணும் கண்களால் ஏதோ பேசி கொண்டார்கள் . எனக்கு விஷயம் புரிந்த அளவிற்கு , அந்த சைகைகள் புரியவில்லை ( வருத்தம் தான் ) .அப்புறம் தான் கவனித்தேன் ... எனக்கு பின்னால் இதை இன்னொரு நபரும் கவனித்து கொண்டிருந்தார் ..


அவர் ஊனமுற்றோர் பயன்படுத்தும் கருவியுடன் அமர்ந்திருந்தார், ( அவர் கால்கள் சரி இல்லை வயது எப்படியும் முப்பத்தி ஐந்து இருக்கும் ) பக்கத்தில் ஒரு பையும் , கையில் கடலை பாக்கெட்டும் இருந்ததது .. எப்படி கடற்கரைக்கு வந்தார் ...துணைக்கு யார் வந்தார்கள் என்றும் தெரியவில்லை ... நாங்கள் இருவரும் அந்த பையனையும் , அந்த பச்சைப் புடவை பெண்ணையும் பார்த்து கொண்டிருந்தோம் ...


சிறிது நேரம் கழித்து இருவரும் தனி தனியாக நடக்க ஆரம்பித்தார்கள் ( கடலை நோக்கி ) .. கொஞ்சம் கொஞ்சமாய் இருவரும் பக்கம் பக்கமாய் வந்து , ஒரு கட்டத்தில் இருவரும் ஜோடி சேர்ந்தே நடக்க ஆரம்பித்தார்கள்.. அவர்கள் பின்னல் போகலாம் என்று எனக்கு இருந்த ஐடியா வை நான் மாற்றி கொண்டேன் .. ஏனெனில் நான் வந்த வேலையும் கெட்டு போய்விடும் என்பதாலும் , அந்த ஊனமுற்ற மனிதரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்ததாலும் (அது தான் உண்மை ) ..


பதினைந்து நிமிடங்கள் கழித்து ,


என் கணிப்பை பொய்யாக்கி விட்டு , அந்த மனிதர் தன் ஊன்றுகோல் உதவியுடன் அவர்கள் சென்ற திசையை நோக்கிச் சென்றார் ..எழுந்து போகும்போது நான் அவரை பார்க்கிறேனா என்பதை கவனித்து கொண்டே நடந்து சென்றார் . யோசித்து பாருங்கள் அவ்வளவு மணல் அடர்த்தியில் . ஊன்றுகோலுடன் அவர் நடந்து சென்றதை ..அது எனக்கு இப்போதும் ஆச்சர்யமான விடயம் தான் ...



இவர் நடுவில் மூச்சு வாங்கி . சற்று நின்று மீண்டும் நடக்க தொடங்கினார் ...
அதற்குள் அந்த இளைஞன் மட்டும் இவரைத் தாண்டிச் சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தான்.( அவர்கள் இருவரும் போய் அப்போதுவரை முப்பது நிமிடம் ஆகி இருந்ததது ..)


அந்த பெண்ணைக் காணவில்லை .. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதை என்னால் பார்க்க முடிந்ததது ...அவ்வளவு தான்.. அந்த இளைஞன் தன் பைக்கில் ஏறி , கிளம்பிவிட்டான் ,, கிளம்பும்போது அவரையும் என்னையும் தனித்தனியாக பார்த்துக்கொண்டே போனான் .. ( என்ன நினைத்தான் என்று தெரியவில்லை )

இந்த மனிதரும் தன் ஊன்றுகோலை வைத்து போய்க்கொண்டே இருந்தார் .. அந்த பெண்ணும் எதிரே வந்தார்.. இவர் ஏதோ அந்த பெண்ணிடம் பேச , இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர். அவ்வளவு தான் .என் கண்களிடமிருது மறைந்து போயினர் .. ( ச்ச .. என்ன வாழ்க்கை இது )


ஒரு நிமிடம் கழித்து . அந்த பெண் பதற்றமாக திரும்பி வந்தார் .நான் என்ன என்னவோ நினைத்தேன் ... அந்த பெண் என்னை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே ( உண்மையிலேயே அப்படித்தான் பார்த்தார் ) என்னை கடந்து சென்று மறைந்து விட்டார்..அவர் ஆட்டோவில் போய் இருக்கலாம் என்பது என் கணிப்பு .. ஆனால் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை ..


பத்து நிமிடம் கழித்து அவரும் கஷ்டப்பட்டு ஊன்றி வந்தார் ...
என்னை பார்த்துக்கொண்டே தான் வந்தார் ..என்னை கடந்து செல்லும் போது , என்னிடம் சொல்வது போல் மெதுவாய் பேசிக்கொண்டே போனார்
.. " நானும் தானே காசு குடுக்குறேன் னு சொல்றேன்...அவளுக்கு அப்படி என்ன கிராக்கி , என்னை பார்த்து ஓடிப் போய்ட்டா " ..

எனக்கு புரிந்தது. இவர் ஊனத்தை எண்ணி ஒதுக்கி விட்டு அவள் போய் இருக்கலாம் என்று ..



இப்போது தான் எனக்கு அந்த தொழுநோயாளி நிகழ்வு ஞாபகம் வந்தது ..


இரண்டு நிகழ்வுகளுக்கும் பொருத்தமான நிறைய விஷயங்கள் உள்ளது ..


காமம் என்பது , சிந்திப்பதையும் , கற்பனையும் தாண்டி , செயல்படுத்துவது என்ற நிலையை எட்டும் போது நிறைய பிரச்சனைகள் நமக்கு வருகிறது .. அதை சரிப்படுத்தவோ , வழிகாட்டவோ , நிறைய நிபுணர்கள் இங்கே உள்ளனர் ..( நாராயண ரெட்டி , காமராஜ் , ஷாலினி ,வகையறாக்கள் )..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு போன் செய்து சந்தேகம் கேட்கிற அளவிற்கு பாலியல் குறித்த புரிதல் வளர்ந்திருக்கிறது ...
ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமாகி இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் எனக்கு தெரியவில்லை ..




நாம் சாலையில் அன்றாடம் பார்க்கிற தொழுநோயாளிகள் , பிச்சைகாரர்கள், சுயநினைவோடு ஆனால் தெளிவின்றி திரிபவர்கள் , என இன்னும் பட்டியல் நீளும் இவர்களது பாலியல் தேவைகள் எப்படி பூர்த்தியாகின்றன ?
நாயோடு உறவு கொண்ட அந்த மனிதரின் பாலியல் தூண்டலை எதனால் சரிப்படுதவோ , ஈடுகட்டவோ முடியும் ?
நிச்சயமாய் அவர் அதை விரும்பி செய்திருக்க வாய்ப்பு உண்டா என்றால் தெரியவில்லை ..

ஆனால் அந்த மனிதர்களின் பாலியல் தேவைகள் சமூகத்தை எதிர்நோக்கியதாக இல்லை .. யாரும் தொடவே அஞ்சும் அவருக்கு அந்த எதிர்பார்ப்பும் இருக்கிற வாய்ப்பும் குறைவு ..
அவரோடு பழகி , அவரோடு உண்டு , அவரோடு திரிகிற , அந்த நாயிடம் தான் அவரும் தன் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது ..



இரண்டாவது நிகழ்வு இன்னும் மோசம் ,,,

திருமணம் ஆகாத உடல் ஊனமுற்ற ஒரு ஆண் /பெண்ணின் பாலியல் கற்பனைகளுக்கு , இந்த சமூகம் என்ன வடிகால்களை ஏற்படுத்தி இருக்கிறது ?

நிச்சயமாய் நான் கடற்கரையில் சந்தித்த அந்த மனிதர், உடல் தேவைக்காக தான் நிச்சயம் இங்கு வந்திருப்பார் ..ஏன் எனில் கடற்கரைக்கு அந்த நேரத்தில் தனியாக, அவ்வளவு சிரமப்பட்டு , காத்திருக்க , வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை ...

இது தவறான கணிப்பாக கூட இருக்கலாம் ..

ஆனால் அந்த பெண்ணால் அவர் புறக்கணிக்கப்பட்டது அவரை விட எனக்கு அதிகம் வலியை ஏற்படுத்தியது ..

ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கு,

தற்போது இங்கு கிடைக்கிற சுதந்திரம் ! ( கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடும்போது ) இந்த வகை மனிதர்களுக்கு கிடைக்காமல் போய் இருப்பது ஜீரணிக்க முடியாத கவலை ..

ஒரு வேளை, ஒரு ஊனமுற்ற மனிதர் ஒரு பால் ஈர்ப்பு கொண்டவராகவும் இருந்தால் அவர் நிலைமை இன்னும் மோசம் ....

அதே போல பெண்களை பொருத்தமட்டில் மேற்கண்ட எல்லா தரப்பிலும் அவர்கள் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது ..அது பற்றிய சிந்தனையை பேசினாலே நம்மை பண்பாட்டு விரோதி ஆக்கிவிடுவார்கள் ...

இதை பற்றி யாரவது பேசினால் , மேற்கண்ட அனைவருக்கும் வாழ்வாதார பிரச்சனைகளே தீர்க்க முடியாததாக இருப்பதை சுட்டி காட்டி இதை உதறிவிடுவார்கள் ..
உண்மையில் உணவு ,உறக்கம், உறைவிடம் ,இவை மூன்றும் நல்ல வாழ்க்கைகான அடிப்படையை போலவே , பாலியல் தேவை தொடர்பான் வசதிகளும் அவசியமாகிறது ..

சராசரி மனிதர்களுக்கே மூன்றாவது தளம் (Space ) தேவைப் படும்போது இப்படி பட்ட மனிதர்களுக்கு அது கட்டாய அவசியமாகிறது என்பதை நாம் நினைவில் வைத்துகொள்ள மறந்து போகிறோம் .. நாம் நம் , பிள்ளைகளோ ,நண்பர்களோ , உறவினர்களோ, இப்படி இருந்தால் கூட நாம் அது குறித்து சிந்திப்பதில்லை ..


" சரியாய் பூர்த்தி செய்யபடாத பாலியல் தேவைகளும் ,
நிரம்பி வழிகிற பாலியல் ஆசைகளும் " தான் இந்த் சமூகத்தில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன என நினைக்கிறேன் .


வடிகால்கள் என்பவை எல்லா காலங்களிலும் , எல்லா மனிதர்களுக்கும் உரியது .., வடிகால்களை உருவாக்காமல் இருப்பதும் , இருப்பவற்றை பயன்படுத்தாமல் இருப்பதும் , சிலரை பயன்படுத்தாமல் இருக்க விடுவதும் , ஆரோக்கியமான சமூகத்துக்கான அறிகுறி இல்லை ..

இந்த் கட்டுரையை ஒரு பெண்ணின் , ( ஊனமுற்ற பெண்ணின் / ஒரு பால் ஈர்ப்பு கொண்ட பெண்ணின் ) பார்வையில் எழுத , இந்த சமூகம் எனக்குள் இட்டு நிரப்பி இருக்கிற , தடைகளை உடைத்து எறியவே , இந்த கட்டுரையை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்..


. நான் இங்கு எந்த தீர்வையும் முன் வைக்கவில்லை ..காரணம் அது எனக்கு தெரியவில்லை ..ஆனால் தீர்வு ஒன்று வேண்டும் என்று மட்டும் எனக்கு தெரியும் ...


எல்லோருக்குள்ளும் இங்கு காமம் உறைந்துகிடக்கிறது .. எல்லோருக்கும் சரிசமமாக ,
அதை தட்டி எழுப்பக்கூடிய தூண்டல்களை , ஒவ்வொரு தலைமுறையிலும் ,அதிகமாகவே உருவாக்க தெரிந்த இந்த சமூகத்துக்கு , அதை நெறிப்படுத்தவும் தெரிந்திருக்கவேண்டும் ..இல்லையேல் இந்த சமூகத்தில் வாழ்கிற நாம் , நம்மை மனிதர்கள் என்று சொல்லி கொள்வதற்கு தகுதிஆனவர்கள் இல்லை என்பதாவது தெரிந்திருக்கவேண்டும்..

நான் இந்த கட்டுரையை நிறைவு செய்ய போவதில்லை.. நிறைவை நோக்கி பயணிக்க விட்டுவிட போகிறேன்.. நீங்களே நிறைவு செய்து கொள்ளுங்கள் .. ஏனெனில் நான் பேசிக்கொண்டிருப்பதும் ஒரு வகை ஜனநாயகம் தான் ..அது நாம் பேச மறந்த
" பாலியல் ஜனநாயகம் "